Our Feeds


Monday, September 20, 2021

SHAHNI RAMEES

கைவிடப்பட்ட நிலையில் குழந்தை ஒன்று உயிருடன் மீட்பு

 


கிண்ணியா பிரதேச செயலகத்திற்குற்பட்ட சம்வாச்சதீவு பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் 1 மாதம் மதிக்கத்தக்க குழந்தை ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கைப்பற்றப்பட்ட குழந்தை கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெறிவிக்கின்றனர்.

இன்று (19) காலை அப்பகுதி வீதியோரத்திலிருந்து குழந்தை மீட்கப்பட்டதாகவும் மேலதிக விசாரனைகளை மேற்கோண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

-திருகோணமலை நிருபர் பாருக்-

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »