Our Feeds


Thursday, September 30, 2021

Anonymous

அத்தனகலவில் கைதான யாழ். இளைஞர்கள் ஐவரும் 72 மணி நேர தடுப்புக் காவலில்!



(எம்.எப்.எம்.பஸீர்)


கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் வைத்து கூரிய கத்திகளுடன் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்கள் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து குறித்த ஐவரும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 72 மணி நேர தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டுவரும் நிலையில், அவர்கள் யாழ். ‘ ஆவா ‘ குழுவுடன் தொடர்பில் இருந்த சந்தேக நபர்கள் என தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

அத்துடன் அந்த ஐந்து பேரில் இருவர், தமிழீழ விடுதலை புலிகளின் உறுப்பினர்களாக இருந்து புனர்வாழ்வு பெற்று சமூக மயப்படுத்தப்பட்டவர்கள் எனவும் சிசிடியின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த ஐவரையும் கைது செய்து நடத்திய சோதனையில், 7,8 அங்குலங்களைக் கொண்ட நான்கு கத்திகள், மனிதத் தலை பொறிக்கப்பட்ட பயிற்சி அட்டை உள்ளிட்டவை மீட்கப்பட்டிருந்தன. இதனைவிட, அவர்கள் வேலை செய்த குறித்த தொழிற்சாலையின் மல சல கூடம் ஒன்றுக்கு பின் புறமாக, வாழை மரம் ஒன்றின் கீழ் சூட்சுமமாக புதைத்து வைக்கப்பட்டிருந்த இரு வாள்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »