வெலிகம பிரதேசத்தில் தகனசாலை மற்றும் இறுதிக்கிரியை மண்டபம் ஒன்று புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு அமைக்கப்பட்டுள்ள பெயர்ப்பலகையானது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
குறித்த பெயர் பலகையில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் என மொத்தமாக 50 இற்கும் மேற்பட்டோரின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
ஆட்சிக்கு வரும்போது பெயர்களை பயன்படுத்தமாட்டோம் என் கோரியவர்கள் இப்போது இவ்வாறு பயன்படுத்துவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, கொரோனா மரணங்களை தகனம் செய்வதற்காக அமைக்கப்படும் இவ்வாறு தகனசாலைகளிலும் அரசியல்வாதிகள் அவர்களின் பெயர்களை பதிவிட்டிருப்பது மிகவும் வெட்கக்கேடான விடயமெனவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.