Our Feeds


Tuesday, September 21, 2021

Anonymous

அத்தியாவசிய 4 பொருட்களின் விலைகள் கட்டாயம் அதிகரிக்கப்படும் – அமைச்சர் வெளியிட்ட கருத்து



பால் மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகளை கட்டாயம் அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூட்டுறவு சேவைகள், விநியோக அபிவிருத்தி, நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.


இந்த பொருட்களுக்கான விலைகள் உலக சந்தையில் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டிலும் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கொழும்பு – கோட்டை ரயில் நிலைய வளாகத்தில் Q-SHOP விற்பனை நிலையத்தை திறந்து வைத்து கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


இந்த பொருட்களுக்கான விலை அதிகரிப்பு மேற்கொள்வது குறித்து இந்த வாரம் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »