2011ஆம் ஆண்டு நடந்த உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டு ஆதாரமற்றதாகும் என்று சட்டமா அதிபரினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த விடயம் பற்றி அமைக்கப்பட்ட விளையாட்டுத்துறை விசாரணை பிரிவும் தற்போது விசாரணைகளை நிறைவு செய்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, உப்புல் தரங்க உள்ளிட்ட முன்னணி வீரர்களிடமும் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது.
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரான டலஸ் அழகப்பெரும உடனடி விசாரணைகளை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.