Our Feeds


Wednesday, September 22, 2021

Anonymous

14 வயது சிறுவன் சுட்டுக் கொலை: பிரதான சந்தேகநபர் கைது.



வீரக்கெட்டிய பிரதேசத்தில் கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற தகராறொன்றில் 14 வயது சிறுவன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


மற்றுமொரு நபருடன் காட்டுப்பகுதியொன்றில் தலைமறைவாகி இருந்த மேற்படி சந்தேகநபர், நேற்றிரவு வீரக்கெட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை கைது செய்தபோது, கொலைக்காக பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் மற்றைய சந்தேக நபரிடமிருந்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர் இன்று வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வீரக்கெட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »