Our Feeds


Thursday, September 23, 2021

Anonymous

வெள்ளைப்பூண்டை 135 ரூபாவுக்கு விற்று, மீண்டும் 450 ரூபாவுக்கு வாங்கிய சதொச? - போட்டுடைக்கும் முன்னால் பணிப்பாளர்



சதொச ஊடாக விற்பனை செய்வதற்காக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த வெள்ளைப்பூண்டு கொள்கலன்கள் இரண்டை கிலோ 135 ரூபா வீதம் வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் துஷான் குணவர்தன தெரிவித்தார்.


பின்னர் அந்த வெள்ளைப்பூண்டு கொள்கலன்கள் இருண்டும் மீண்டும் கிலோ 450 ரூபா வீதம் சதொசவிற்கே கொள்வனவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதே முறையில் சீனி, பால்மா, கோதுமை மா உள்ளிட்ட பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு மீள கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் உரிய தரப்பினருக்கு அறிவித்ததோடு, புலனாய்வு பிரிவினருக்கு முறைப்பாடு செய்துள்ளதாக குறிப்பிட்ட அவர், மேலிடத்திற்கு தெரியாமல் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்திருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »