(க.கிஷாந்தன்)
மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவர் உயிரிழந்த சம்பவம் அவிசாவளை பகுதியில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவிசாவளை – தைகல – கபுவெல்லவத்த பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து, தனது 8 வயதான மகளுடன் அதிகாலை தனது மாமியார் வீட்டுக்குச் சென்று மகளை அவரிடம் ஒப்படைத்த நிலையில் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
சம்பவத்தில் அவிசாவளை – தைகல – கபுவெல்லவத்த பகுதியைச் சேர்ந்த 29 வயதான ஜனக்க மதுஷங்க ஜயதிலக்க என்பவரே உயிரிழந்துள்ளார். சடலம் அவிசாவளை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.