Our Feeds


Sunday, September 19, 2021

Anonymous

கணவனைக் கொலை செய்த மனைவி 08 வயது மகளை மாமியாரிடம் ஒப்படைத்து விட்டு பொலிஸில் சரண்.



(க.கிஷாந்தன்)


மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவர் உயிரிழந்த சம்பவம் அவிசாவளை பகுதியில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று  (18)   இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவிசாவளை – தைகல – கபுவெல்லவத்த பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து, தனது 8 வயதான மகளுடன் அதிகாலை தனது மாமியார் வீட்டுக்குச் சென்று  மகளை  அவரிடம்  ஒப்படைத்த நிலையில் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

சம்பவத்தில் அவிசாவளை – தைகல – கபுவெல்லவத்த பகுதியைச் சேர்ந்த 29 வயதான ஜனக்க மதுஷங்க ஜயதிலக்க  என்பவரே உயிரிழந்துள்ளார். சடலம் அவிசாவளை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »