சுகாதார அமைச்சில் உள்ள பல உயர் அதிகாரிகளின் பதவிகளை மாற்றியமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் உயர் அதிகாரிகளின் பங்களிப்பானது திருப்தியளிக்கும் வகையில் இல்லாததன் காரணமாக இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விசேடமாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவின் பங்களிப்பு போதுமானதாக இல்லையெனவும், அதனால் அவரது பதவியில் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், கொரோனா தடுப்பு செயலணிக் கூட்டத்தின் போது, சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு விளக்கமளித்துள்ளதாக அறியமுடிகிறது.