(எம்.மனோசித்ரா)
கொழும்பிலுள்ள இலங்கை மருத்துவ சங்கத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து உண்மையை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு மருத்துவ சமூகம் என்ற ரீதியில் எமக்குள்ளது. கடந்த ஒரு வாரத்துக்குள் தொற்றாளர்கள் எண்ணிக்கை 34 சத வீதத்தினாலும் , மரணங்களின் எண்ணிக்கை 60 சத வீதத்தினாலும் அதிகரித்துள்ளது. இதற்கமைய அடுத்துவரும் வாரங்கள் எவ்வாறு அமையும் என்பதை மக்கள் உணர வேண்டும். இந்த நிலைமையை அவதானிக்கும்போது இலங்கையில் வைரஸ் பரவல் சமூகமயப்பட்டுள்ளமை தெளிவாகிறது.
இலங்கையில் ஆரம்பத்தில் 0.5 சத வீதமாகக் காணப்பட்ட கொவிட் -19 மரணங்கள் தற்போது 4 – 5 சதவீதம் வரை உயர்வடைந்துள்ளது. தீவிர நிலைமையை அடையும் தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காணப்படுவதால் வைத்தியசாலைகளும் நிரம்பியுள்ளன.
அத்தியாவசிய தேவைக்காக வெளியில் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டாலும் 50 வயதுக்கு குறைந்த , தொற்றா நோய்களால் பாதிக்கப்படாத மற்றும் முழுமையாக தடுப்பூசியை ஏற்றிக் கொண்டவர்கள் பாதுகாப்பாக வெளியில் செல்லவது பொருத்தமானது என்றார்.