Our Feeds


Friday, August 13, 2021

www.shortnews.lk

SHORT_BREAKING: ஒரு மணித்தியாலத்திற்குள் 5 பேர் கொரோனாவில் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

 



(எம்.ஆர்.எம்.வசீம்)


வீரியம் மிக்க கொவிட் -19 டெல்டா வைரஸ் காரணமாக மணித்தியாலத்துக்கு  மனித உயிர்கள் பலியாகும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. அதனால் நாட்டை முடக்குவதற்கு தொடர்ந்தும் தாமதிக்க வேண்டாம் என அரச வைத்திய அதிகாரிகள் பேரவையின்  செயலாளர் வைத்தியர் கமல் ஏ. பெரேரா தெரிவித்தார்.

நாட்டில் கொவிட் -19 வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருவதன் பாதிப்பு தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அரச வைத்திய அதிகாரிகளின் மன்றம் என்ற வகையில், டெல்டா வைரஸின் தீவிர பரவல் காரணமாக, நாளுக்குநாள் மிகவும் மோசமான நிலைமைக்கு சென்று கொண்டிருக்கும் எமது நாட்டை உடனடியாக முடக்க வேண்டும் என நாங்கள் தொடர்ந்து தெரிவித்து வருகிறோம்.

தற்போது ஒரு மணித்தியாலத்துக்கு 5 மனித உயிர்கள் கொவிட்-19  தொற்றினால் பலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் உடனடியாக கடுமையான தீர்மானம் மேற்கொண்டு இந்த நிலைமையை கட்டுப்படுத்தவில்லை என்றால், எதிர்வரும் நாட்களில் நிலைமை மிகவும் மோசமடையும்.

பொருளாதாரத்தை காரணம் காட்டி நாட்டை முடக்கும் தீர்மானத்தை பிற்போடும் ஒவ்வொரு நாளும் டெல்டா வைரஸ் தீவிரமாக நாடுபூராகவும் விரிவடைந்து, நாட்டின் வைத்தியசாலை கட்டமைப்பை மேலும் பாதிப்படையச் செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »