இலங்கைக்கு கொண்டு வருவதற்கான 40 டொன் மருத்துவ ஒக்சிஜன் கப்பலில் தற்போது ஏற்றப்பட்டு வருவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றது.
இலங்கை கடற்படைக்கு சொந்தமான சக்தி கப்பலில், இந்த ஒக்சிஜன் ஏற்றப்படுகின்றது.
சென்னை துறைமுகத்திலேயே, ஒக்சிஜன் தொகை ஏற்றப்படுவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக தெரிவித்துள்ளது