அல்-மத்ரஸதுல் மஃமூர் மற்றும் முஸ்லிம் இடதுசாரி முன்னனி ஆகியவை இணைந்து நடத்திய “மனித நேய இரத்ததான முகாம்” சனிக்கிழமை - 31.07.2021 அன்று கொழும்பு, மாளிகாவத்தை மன்சில் வரவேற்பு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில் 40க்கும் அதிகமானோர் கலந்து கொண்ட நிலையில் 30 பேர் இரத்ததானம் வழங்கினார்கள்.
குறுகிய நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் இக்பால் அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத் தக்கதாகும்.