Our Feeds


Saturday, August 7, 2021

www.shortnews.lk

Just_In: கொழும்பு துறைமுக அதிகார சபையில் சுமார் 600 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

 



கொழும்பு துறைமுக அதிகார சபையில் சுமார் 600 ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக துறைமுக வட்டாரங்கள் கூறுகின்றன.


நேற்றைய நிலவரப்படி, 593 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

கடந்த மே மாதம் முதல் துறைமுகத்தில் பிசிஆர் ஆய்வுகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், துறைமுக ஆணையத்தில் பிசிஆர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால், ஏராளமான நோயாளிகளைக் கண்டறிய முடியும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

துறைமுகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இந்த நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, துறைமுக ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கொரோனா இரண்டாவது தடுப்பூசியின் அதிகப்படியான அளவு காரணமாக துறைமுக ஊழியர்களிடையே கொரோனா பரவியதாக சந்தேகிக்கப்படுகிறது எனவும் 
சுதந்திர துறைமுக ஊழியர் சங்கத்தின் தலைவர் லால் பெங்கமுவ தெரிவித்தார். R

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »