Our Feeds


Thursday, August 5, 2021

www.shortnews.lk

Just_In: 10 மாவட்டங்களில் டெங்கு அபாயம் - பொது மக்களுக்கு கடும் எச்சரிக்கை

 

நாட்டில் டெங்கு அபாயமிக்க மாவட்டங்களாக 10 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.




இதற்கமைய, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, குருநாகல், இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை ஆகிய 10 மாவட்டங்களுக்கே, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தேசிய டெங்கு ஒழிப்பு பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர் ஹிமாலி ஹேரத் குறிப்பிட்டார்.


நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலையால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுனார்.

ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 10,030 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் அதிகளவானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »