முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர உயிரிழந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றுக்குள்ளான மங்கள சமரவீர, தற்போது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த நிலையில், மங்கள சமரவீர சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பகிரப்பட்டுள்ளன.
இவ்வாறு பகிரப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.