ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எம்.பியுமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், இன்று (17) சந்திப்பொன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
நாட்டின் தற்போதைய கொரோனா நிலைமைகள் தொடர்பில் இருவரும் தொலைபேசியில் உரையாடிக்கொண்டனர். அதனடிப்படையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் உப-தலைவர் அகில விராஜ் காரியவசத்தின் தந்தை மரணமடைந்துள்ளார். அவரது இறுதி கிரியையில் பங்கேற்பதற்காக, ரணில் விக்கிரமசிங்க கொழும்பிலிருந்து இன்றுக்காலை வெளியேறினார்.
கொழும்புக்குத் திரும்பியவுடன் இந்த சந்திப்பு இடம்பெறும் என ஐ.தே.கவின் தலைமையகமான சிறிகொத்தாவின் வட்டாரங்கள் தெரிவித்திருந்த அடிப்படையில் தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அறியவருகிறது.