Our Feeds


Tuesday, August 17, 2021

www.shortnews.lk

BREAKING: கோட்டா - ரனில் இடையே தற்போது விசேட சந்திப்பு

 



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எம்.பியுமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், இன்று (17) சந்திப்பொன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

நாட்டின் தற்போதைய கொரோனா ​நிலைமைகள் தொடர்பில் இருவரும் தொலைபேசியில் உரையாடிக்கொண்டனர். அதனடிப்படையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் உப-தலைவர் அகில விராஜ் காரியவசத்தின் தந்தை மரணமடைந்துள்ளார். அவரது இறுதி கிரியையில் பங்கேற்பதற்காக, ரணில் விக்கிரமசிங்க கொழும்பிலிருந்து இன்றுக்கா​லை வெளியேறினார்.

கொழும்புக்குத் திரும்பியவுடன் இந்த சந்திப்பு இடம்பெறும் என ஐ.தே.கவின் தலைமையகமான சிறிகொத்தாவின் வட்டாரங்கள் தெரிவித்திருந்த அடிப்படையில் தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அறியவருகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »