Our Feeds


Thursday, August 19, 2021

www.shortnews.lk

BREAKING: கொழும்பு பெரிய பள்ளிவாசல் கொரோனா சிகிச்சை நிலையமாக மாறுகிறது - முழு நாட்டுக்கும் முன்னுதாரணம்

 





நாட்டில் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதன் காரணமாக மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்நிலையில், கொரோனா நோயாளர்களுக்கு உதவிடும் வகையில் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஒரு பகுதியை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

இதற்காக சுகாதார அமைச்சிடம் அனுமதிக்கு கோரியுள்ள நிலையில், அனுமதி கிடைத்தவுடன் அங்கு கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறியமுடிகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »