கிரிபத்கொட பகுதியிலுள்ள 4 மாடி கட்டிடமொன்றில் தீ பரவியுள்ளது.
கட்டிடத்திற்குள் சிக்குண்டுள்ள 4 சிறார்கள் உள்ளிட்ட 12 பேரை காப்பாற்றுவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக, தீயணைப்பு பிரிவிற்கு சொந்தமான 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.
கட்டிடத்தில் தீ பரவியமைக்கான கரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.