Our Feeds


Tuesday, August 17, 2021

www.shortnews.lk

BREAKING: ஊரடங்கு உத்தரவை படிப்படியாக அதிகரித்து நாட்டை முடக்கத் திட்டம் ?

 



நாடளாவிய ரீதியில் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரையிலான ஊரடங்கு சட்டம், 16ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஊரடங்கு உத்தரவை, வார இறுதி நாள்களில் முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்பின்னர், அந்த ஊரடங்கு உத்தரவை ஒரு மாதத்துக்கு முழுமையாக  பிறப்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிப்​போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருதல். தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. இவற்றை கருத்தில் கொண்டும், சுகாதார வழிமுறைகளை பலரும் முறையாக பின்பற்றாமையை கவனத்தில் கொண்டுமே இவ்வாறு ஊரடங்கை நீடிப்பதற்கு கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது. (TM)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »