Our Feeds


Sunday, August 15, 2021

www.shortnews.lk

BREAKING: நாட்டில் இரத்தத்திற்கும் தட்டுப்பாடு - சுகாதார வழிமுறை பேணி இரத்தம் வழங்க வருமாறு அவசர அழைப்பு

 



குருதிக் கொடை வழங்க முன்வருமாறு தேசிய குருதி மாற்றல் சேவை மையம், பொதுமக்களைக் கோரியுள்ளது.


கொரோனா பரவல் காரணமாக, குருதித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால், சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவலினால், குருதிக் கொடை திட்டங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளமையால், நாட்டில் குருதித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், குருதிக் கொடையாளிகள் நாட்டின் பிரதான வைத்தியசாலைகளுக்கும், குருதி வழங்கல் மத்திய நிலையங்களுக்கும் சென்று குருதி வழங்க முடியும் என தேசிய குருதி மாற்றல் சேவை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக, 011 533 2153 அல்லது 011 533 2154 என்ற தொலைபேசி இலக்கங்களைத் தொடர்புகொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »