Our Feeds


Sunday, August 15, 2021

www.shortnews.lk

BREAKING: தலைநகரை சுற்றி வலைத்த தாலிபான்கள் - இன்னும் சில மணித்தியாளங்களில் ஆப்கான் ஜனாதிபதி பதவி துறப்பார்.

 



ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி இன்னும் சில மணித்தியாலங்களில் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படுவதாக செய்தி வெளியாகியுள்ளது.


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்குள் சகல பகுதிகளிலிருந்தும் தலிபான்கள் நுழைய ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு இன்று தெரிவித்தது.


எனினும், தலைநகர வாயில்களை கடந்து செல்ல வேண்டாம் என தமது போராளிகளுக்கு தான் உத்தரவிட்டுள்ளதாக தலிபான் தலைமை இன்று அறிவித்துள்ளது. வன்முறை மூலம் காபூலை கைப்பற்ற விரும்பவில்லை எனவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.


இந்நிலையில், ஜனாதிபதி அஷ்ரப் கானி சில மணித்தியாலங்களில் பதவி துறப்பார் என சவூதி அரேபிய ஊடகமான அல் அரேபியா தெரிவித்துள்ளது.


இதேவேளை, தலிபான்களுடன் அதிகார பகிர்வு தொடர்பாக ஆப்கான் ஜனாதிபதி மாளிகையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுவதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் புதிய இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக அலி அஹ்மத் ஜலாலி நியமிக்கப்படவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


அலி அஹ்மத் ஜலாலி,  2003 முதல் 2005 வரை ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சராக பதவி வகித்தவர். 2017 ஜனவரி முதல்  2018 ஒக்டோபர் வரை ஜேர்மனிக்கான ஆப்கானிஸ்தான் தூதுவராகவும் அவர் பதவி வகித்திருந்தார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »