குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டு, இவர் கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.