Our Feeds


Friday, August 6, 2021

www.shortnews.lk

BREAKING: நாட்டை முழுமையாக லொக்டவுன் செய்ய மாட்டேன் - ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

 



கொரோனா வைரஸ் வியாபித்திருக்கும் நிலையில், நாட்டை முழுமையாக முடக்கமாட்டேன் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நிலைமையை கவனத்தில் எடுத்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் பணித்தார்.


ஜனாதிபதி செயலகத்தில் இன்று (06) நடைபெற்ற கொவிட-19 ​தொற்றொழிப்பு ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

“கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையை காணக்கூடியதாக உள்ளது. எனினும், நாட்டை மூடிவதற்கான இயலுமை இல்லை” என்றார்.

ஏற்பட்டிருக்கும் நிலைமை தொடர்பில் ஆகக் கூடுதலான அவதானத்தை செலுத்தி, தேவையான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் சுகாதார பிரிவினருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »