வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தனது உத்தியோகபூர்வ இல்லத்தினை அரச பொது நிர்வாக அமைச்சிடம் ஒப்படைத்துள்ளார்.
அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ இல்லமானது, இதற்கு முன்னதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பயன்படுத்தி இருந்ததாகவும், குறித்த காலப்பகுதியில் அந்த வீட்டினுள் சிறுமியொருவர் துஷ்பிரயோத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தே அமைச்சர் பந்துல குணவர்தன இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக அறியமுடிகிறது.
மேலும், அப்போதைய காலப்பகுதியில் உத்தியோகபூர்வ இல்லத்தினை புதுப்பிப்பதற்காக 21 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.