Our Feeds


Monday, August 2, 2021

www.shortnews.lk

BREAKING: பாலியல் துஷ்பிரயோகம், போதை் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் - சாந்த பண்டார MP

 



(இராஜதுரை ஹஷான்)


போதைப்பொருள், பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை விதித்து அதனை நிறைவேற்ற வேண்டும்.  தண்டனைகள் கடுமையானால்தான் குற்றங்கள் குறைவடையும்.
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சட்டங்களை திருத்தியமைப்பது அவசியமாகும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்தார்.

சுதந்திர கட்சியின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், போதைப்பொருள் கடத்த குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என சுதந்திர கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

நீதிமன்றத்தினால்வழங்கப்படும் மரண தண்டனையை பெயரளவில் மாத்திரம் மட்டுப்படுத்தாமல், செயலளவில் செயற்படுத்த வேண்டும் என்று உணரப்பட்டது.

மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தமைக்கு கடுமையான எதிர்ப்புக்கள் சர்வசே மற்றும் உள்ளக மட்டத்தில் எழுந்தன. காலப்போக்கில் இதனை செயற்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்த 16 வயது சிறுமி மரணித்த சம்பவமும் அதனை தொடர்ந்து வெளியாகியுள்ள விடயங்களும் வன்மையாக கண்டிக்கத்தக்கன என்றும் அவர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »