எபோல வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த மாபர்க் வைரஸ் தற்போது ஆபிரிக்க நாடுகளில் பரவ ஆரம்பித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
இந்த வைரஸ் தொற்று ஏற்படுவோரில், 88 சதவீதமானோர் உயிரிழப்பதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஓகஸ்ட் 2ஆம் திகதி உயிரிழந்த ஒருவரின் மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் ஊடாக இந்த வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உலக சுகாதார ஸ்தாபனம் கோரியுள்ளது.