கொரோனா மற்றும் டெல்ட்டா வைரஸ் பரவல் நாட்டில் தீவிரமடைந்துள்ள நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தினை எதிர்வரும் 30 ஆம் திகதிக்குப் பின்னர் மேலும் ஒரு வார காலத்திற்கு நீடிப்பது குறித்து அரச உயர்மட்டம் ஆராய்ந்து வருகிறது.
ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய சேவைகள் மட்டும் இயங்க ஆரம்பித்துள்ள நிலையில் ஊரடங்கை மேலும் ஒரு வார காலத்திற்கு நீடித்தால் நோயாளர்களின் எண்ணிக்கை குறையலாமென சுகாதாரத்துறை நிபுணர்கள் அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதன்படி ,எதிர்வரும் வியாழன்வரை நிலைமைகளை அவதானித்து இறுதித் தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு அரசு உத்தேசித்துள்ளது.