கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளடங்களாக 265 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று வெளியான கொரோனா பரிசோதனை முடிவுகளின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.
27 மருத்துவர்கள், 105 தாதியர்கள் மற்றும் 133 சுகாதார ஊழியர்களுக்கே இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 600இற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.