வீடுகளிலோ அல்லது மண்டபங்களிலோ திருமண நிகழ்வுகளை நடத்த எதிர்வரும் 17ம் திகதி முதல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஜெனரல் ஷவேந்திர சில்வாவை மேற்கோள்காட்டி, அரசாங்க தகவல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
கொவிட் – 19 வைரஸ் பரவலை தடுக்கும் நோக்குடன் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இன்று நள்ளிரவு (15) முதல் மக்கள் ஒன்று கூடுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலும், உணவகங்களில், 50 வீதமானோர் மாத்திரமே ஒரு நேரத்தில் இருக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சன நெரிசல் மிக்க பகுதிகளில் ஒன்று கூடுவதை இயலுமானளவு தவிர்த்துக்கொள்ளுமாறு இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா கேட்டுக்கொண்டுள்ளார். (TC)