கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி கொழும்பு றிஜ்வே சிறுவர் மருத்துவமனையில் இதுவரை 12 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும், சிறுவர் மருத்துவமனையில் நாளாந்தம் 25 தொடக்கம் 30 சிறுவர்கள் வரை கொரோனா தொற்றுக்கு உள்ளாவதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், மருத்துவமனையில் ஊழியர்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எனவும் மருத்துவமனை பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.