Our Feeds


Sunday, August 22, 2021

www.shortnews.lk

வைத்தியசாலைக்கு வருவதற்கு அச்சப்பட வேண்டாம். - வீட்டில் இருதய நோய்கள் ஏற்பட்டால் பாரிய விளைவுகள் ஏற்படலாம் - வைத்தியசர்கள் எச்சரிக்கை

 



வீடுகளில் உள்ள வெவ்வேறு நோய்த் தாக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் ஏதாவது அசௌகரியம் ஏற்பட்டால் வைத்தியசாலை நோக்கி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் ஹர்ச சதிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.


கொவிட் வைரஸ் அச்சம் காரணமாக சிலர் வைத்தியசாலைக்கு வருதை தவிர்த்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இருதய நோய் போன்ற நோய் நிலைமைகளின் போது வைத்தியசாலைக்கு வருவதை தவிர்த்தால் பாரிய விளைவுகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என விசேட வைத்திய நிபுணர் குறிப்பிட்டார்.

வைத்தியசாலைகளில் கொவிட் சிகிச்சை பிரிவு தனியாக இயங்குவதால் அது குறித்த தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »