இந்த வாரத்திற்கான நாடாளுமன்ற அமர்வுகளை நாளைய தினம் (17) மாத்திரம் முன்னெடுப்பதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்காக இன்று (16) கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றிருந்தது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (16) முற்பகல் 11 மணிக்கு இந்தக் கூட்டம் இடம்பெற்றது.
கொரோனா பரவல் நிலைமைக்கு மத்தியில் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துதல் உள்ளிட்ட ஏனைய விடயங்கள் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.