அரச ஊழியர்கள் எவ்வித இடையூறும் இன்றி வேலைக்கு செல்வதற்காக, மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகள் இன்று (02) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் மாகாணங்களுக்கு இடையில் புகையிர மற்றும் பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
வேலைக்கு செல்வதற்காக மாத்திரமே பொதுப் போக்குவரத்து சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.