இலங்கையில் எந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டாலும், நீங்கள் எந்த நாடுகளுக்கும் தடையின்றி பயணிக்க முடியும் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இருப்பினும், சில நாடுகளில் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதன் மூலம் நிவாரணம் பெறப்படுகிறது.
அதாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டால் தனிமைப்படுத்தப்படாமல் நேரடியாக அந்த நாடுகளுக்குள் நுழைவதற்கான வாய்ப்பை சில நாடுகள் வழங்குவதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.