Our Feeds


Tuesday, August 17, 2021

www.shortnews.lk

நியுசிலாந்தில் ஒரேயொருவருக்கு கொரோனா உறுதி - முழு நாட்டையும் லொக்டவுன் செய்தார் பிரதமர் ஜெசிந்தா.

 



நியூஸிலாந்தில் புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து முழு நாட்டிலும் முடக்கநிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது.


ஆக்லாந்து நகரில் கொவிட் 19 தொற்றுடைய ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். கடந்த 6 மாத காலத்தில் நியூஸிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கொவிட் 19 தொற்று இதுவாகும்.

இந்நிலையில் நியூ ஸிலாந்து முழுவதும் லொக்டவுணை பிரதமர் ஜெசிந்தா ஆர்டன்; தலைமையிலான அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது

ஆக்லாந்தில் ஒரு வார காலத்துக்கும் நியூஸிலாந்தின் ஏனைய பகுதிகளில் 3 நாட்களுக்கும் லொக்டவுண் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »