Our Feeds


Sunday, August 15, 2021

www.shortnews.lk

தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத பெரும்பாலானோர் கொரோனாவில் உயிரிழப்பு – விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத்

 



பொது மக்கள் மத்தியில் கொவிட் வைரஸ் வேகமாக பரவிவரும் தன்மை காணப்படுவதாக சுகாதார அமைச்சின் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.


நோய் அறிகுறிகள் காணப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால், சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமாயின், தடுப்பூசி ஏற்றிக்கொள்ள வேண்டும்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்கள் என்றும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »