இந்தியாவினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள 100 மெற்றின் டொன் ஒட்சிசன், நாளை மறுதினம் இலங்கையை வந்தடையவுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம், சீனாவிடத்திலும் ஒட்சிசன் அனுப்பிவைக்கும்படி கோரிக்கையை விடுத்திருக்கின்றது.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸினால், கொழும்பிலுள்ள சீனத் தூதர் சீ ஷென்ஹொன்னிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இவ்விருவருக்கும் இடையே நேற்று அமைச்சில் சந்திப்பு நடந்தபோது இந்தக் கோரிக்கையை அமைச்சர் முன்வைத்தார்.