கொழும்பு மாநகர சபையும் பொலிஸாரும் இணைந்து முன்னெடுக்கும் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் கொழும்பு, சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் இன்றும் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கொழும்பு மாநகரசபை அதிகார எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களில் வசிக்கும், எந்தவொரு கொரோனா தடுப்பூசியையும் செலுத்திக்கொள்ளாத, 30 வயதுக்கு மேற்பட்டோர் வருகைதந்து தடுப்பூசியை செலுத்திக்கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.