Our Feeds


Wednesday, August 18, 2021

www.shortnews.lk

கொரோனா தொற்றில் இளம் முஸ்லிம் மருத்துவர் மரணம்.

 



கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மருத்துவர் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் இன்று காலை (18) உயிரிழந்துள்ளார்.


ராகம மருத்துவமனையில் பணியாற்றிவந்த 34 வயதுடைய மொஹமட் ஜனன் என்ற மருத்துவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதை தெரிந்து தாம் பணியாற்றிய அதே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த மருத்துவர், கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்தமையால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

எனினும் சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த மருத்துவர் கொரோனா தடுப்பூசி இரண்டையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »