பொது முடக்க காலப் பகுதியில் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், அவர்களது வீடுகளுக்கே சென்று தடுப்பூசி வழங்க திட்டமிட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
இன்று (20) இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ம் திகதி அதிகாலை 4 மணி வரை இந்த பொது முடக்கம் அமுலில் இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்தியாவசிய சேவைகளை தவிர, ஏனைய அனைத்து நடவடிக்கைகளுக்காகவும் வெளியில் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.