Our Feeds


Friday, August 20, 2021

www.shortnews.lk

பொது முடக்க அறிவிப்பை தொடர்ந்து, இராணுவ தளபதி விடுத்த மற்றுமொரு அறிவிப்பு

 



பொது முடக்க காலப் பகுதியில் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், அவர்களது வீடுகளுக்கே சென்று தடுப்பூசி வழங்க திட்டமிட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

இன்று (20) இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ம் திகதி அதிகாலை 4 மணி வரை இந்த பொது முடக்கம் அமுலில் இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்தியாவசிய சேவைகளை தவிர, ஏனைய அனைத்து நடவடிக்கைகளுக்காகவும் வெளியில் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »