Our Feeds


Tuesday, August 17, 2021

www.shortnews.lk

ஆப்கானிலுள்ள பௌத்த தளங்களுக்கு ஆபத்து இருக்காது: இலங்கைக்கு தலிபான் உறுதியளிப்பு

 



லிபான் தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் ஆப்கானிஸ்தானில் உள்ள பௌத்த தளங்களுக்கு ஆபத்துக்கள் இருக்காது என்று இலங்கைக்கு தலிபான் உறுதியளித்துள்ளது.


‘டெய்லி மிரரர்’க்கு பிரத்யேகமாக பேசிய தலிபான் செய்தி தொடர்பாளரும் சர்வதேச பேச்சுவார்த்தையாளருமான சுஹைல் ஷஹீன்; “தலிபான்களுக்கு புலிகள் அமைப்பினருடன் எந்த தொடர்பும் இல்லை” என்று கூறியுள்ளார்.

“புலிகளுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் சுயாதீனமான விடுதலை இயக்கம், கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானின் விடுதலைக்காக வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடினோம், ”எனவும் இதன்போது ஷஹீன் குறிப்பிட்டார்.

தோஹாவிலிருந்து டெய்லி மிரர் உடன் தொலைபேசி வழியாக பேசிய போது, அவர் இந்த விடயங்களைக் கூறியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »