Our Feeds


Friday, August 13, 2021

www.shortnews.lk

மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை கடுமையாக்கப்பட்டது - முப்படைகளும் களத்தில் இறங்கின.

 



மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், மாகாண எல்லைகளில் பொலிஸாருக்கு மேலதிகமாக முப்படையினரும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


பொலிஸாரின் ஒத்துழைப்புக்கு முப்படையினர் தேவை என கருதப்படும் இடங்களில் முப்படையினர் நேற்று (12) முதல் கடமைகளில் ஈடுபடுத்தப்படுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

நாட்டில் காணப்படும் கொரோனா நிலைமைக்கு மத்தியில், மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை மீண்டும் கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »