நாட்டில் நேற்றைய தினம் (12) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 155 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,775 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நாளொன்றில் பதிவான அதிக கொரோனா உயிரிழப்புக்கள் இன்று பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.