Our Feeds


Sunday, August 15, 2021

www.shortnews.lk

கொரோனாவினால் ஒட்சிசன் தேவை 70 டொன்களாக அதிகரிப்பு - வாரத்திற்கு ஒரு முறை 100 டொன் இறக்குமதி செய்ய நடவடிக்கை

 



மேல் மாகாணத்தில் பயணக் கட்டுப்பாட்டை அதிகரித்து, மேலும் சுகாதார வழிகாட்டி ஆலோசனை வெளியிடப்படவுள்ளது என்று சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் எஸ்.எச் முனசிங்க தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நேற்று (14) நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கொவிட் தொற்றின் காரணமாக நாட்டின் ஒட்சிசன் தேவை சுமார் 70 தொன்களாக அதிகரித்துள்ளது.

அடுத்த மாதம் முதல் இந்தியாவிலிருந்து வாரத்திற்கு ஒரு முறை 100 தொன் ஒட்சிசன் என்ற வீதத்தில் இறக்குமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »