கொரோனா அச்சம் காரணமாக அரசாங்கம் நாட்டை முடக்க நடவடிக்கை எடுக்காத நிலையில் சுயமாகவே பல நகரங்களும் மூடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இன்றும் பல்வேறு நகரங்கள் மூடப்பட்டிருக்கின்றன.
இதன்படி எஹலியாகொடை, கொட்டகலை, ஹலிஎல, நொச்சியாகம, கதுருவலை, ஹுங்கம, மொணராகலை, வீரக்கெட்டிய, வில்கமுவ ஆகிய நகரங்கள் இன்று தொடக்கம் மூடப்பட்டுள்ளன.
அத்துடன் தம்புத்தேகம நகரம் நேற்று மாலை முதல் மறு அறிவித்தல் வரை இழுத்து மூடப்பட்டுள்ளது.