Our Feeds


Monday, August 16, 2021

www.shortnews.lk

பிலியந்தலை சிறுவர் கிராமத்தில் 50 சிறுவர்கள் உட்பட 91 பேருக்கு கொரோனா உறுதி

 



பிலியந்தலை SOS சிறுவர் கிராமத்தில் உள்ள 50 சிறுவர்கள் உள்ளிட்ட 91 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கெஸ்பேவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.


இவர்களில் பணிப்பாளர் மற்றும் உதவி பணிப்பாளர் ஆகியோரும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏனையவர்களில் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் 16 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் 17 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், குறித்த சிறுவர் கிராமத்திற்கு உள்நுழைவதற்கும் மற்றும் அங்கிருந்து வெளியேறுவதற்கும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறித்த கிராமத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »