கண்டி முதியோர் இல்லமொன்றில் கொரோனா தொற்றுக்குள்ளான 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த முதியோர் இல்லத்தில் இதுவரையில் 46 முதியோர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கண்டி மாநகர சபை சுகாதார பிரிவிரினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், குறித்த முதியோர் இல்லத்தில் 63 பேர் வசித்து வருவதாகவும் கண்டி மாநகர சுகாதார பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.