Our Feeds


Wednesday, August 18, 2021

www.shortnews.lk

20 ஆம் திகதி முதல் லுனுகலை நகரமும் முடக்கம்!

 



லுனுகலை நகரத்தில் இயங்கி வரும் வர்த்தக நிலையங்களை எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் 28ஆம் திகதி சனிக்கிழமை வரை மூட லுனுகலை நகர வர்த்தக சங்கத்தினர் இன்று (18) இடம்பெற்ற கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.


நாட்டில் அதிகரித்துள்ள டெல்டா திரிபுடைய கொரோனாவின் பாதிப்பு லுனுகலை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்ட ஹொப்டன், பீஸ்ஸ, உட்பட நகரை அண்டிய தோட்டங்களிலும், கிராமங்களிலும் வேகமாக அதிகரித்து வருவதனால் பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி வைரஸ் பரவலை குறைக்க ஒத்துழைக்கும் வகையில் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வர்த்தக சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »