தனிமைப்படுத்தல் காலப் பகுதியில் தமது வருமானத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் S.R. ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் திங்கட்கிழமை (23) நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த காலங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்ட போது 5,000 ரூபாவை அரசாங்கம் நிவாரணமாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. R